ஆன்மிகம்
திருபுவனத்தில் செல்வ மாரியம்மன் வீதியுலா

திருபுவனத்தில் செல்வ மாரியம்மன் வீதியுலா- தீமிதி உற்சவம் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2021-04-13 04:39 GMT   |   Update On 2021-04-13 04:39 GMT
10-க்கும் மேற்பட்ட நாதஸ்வர- தவில் கலைஞர்கள் இன்னிசையோடு நடைபெற்ற வீதி உலாவில் பக்தர்கள் அலகு காவடியுடன் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தோப்பு தெருவில் பிரசித்தி பெற்ற சுந்தரமூர்த்தி விநாயகர், செல்வ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உற்சவத்தை முன்னிட்டு செல்வமாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் நேற்று மதியம் அன்ன வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

10-க்கும் மேற்பட்ட நாதஸ்வர- தவில் கலைஞர்கள் இன்னிசையோடு நடைபெற்ற வீதி உலாவில் பக்தர்கள் அலகு காவடியுடன் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து தீமிதி உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் தோப்புத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News