செய்திகள்
கோப்புப்படம்

பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் செயல்படும்

Published On 2020-11-24 17:35 GMT   |   Update On 2020-11-24 17:35 GMT
தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு நிவர் புயலை எதிர்கொள்ள நாளை (25.11.20) பொது விடுமுறை அறிவித்துள்ளது.

பெட்ரோல்-டீசல் விற்பனை அத்தியாவசிய சேவையினை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களும் பாதுகாப்புடன் வழக்கம்போல் இயங்கும்.

நாளை புயலினை எதிர்கொள்ளும் மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும்போது பெட்ரோல்-டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

புயல் கரையை கடந்த பிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் விற்பனை தொடங்கப்படும். மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News