செய்திகள்
வேளாண் விளைபொருட்கள்.

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 6 டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்

Published On 2021-09-20 11:45 GMT   |   Update On 2021-09-20 11:45 GMT
இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 15 ஆயிரத்து 294 தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.
திருப்பூர்:

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. 

இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள், ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 15 ஆயிரத்து 294 தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.29.30 - க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.23.65- க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. 

மேலும் 53 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.100.75-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.76.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மூட்டைகள் 6.5 டன் அளவில் மொத்தம் ரூ. 2 லட்சத்து 48 ஆயிரத்து 678-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது. 

கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு 10-வது வாரமாக நடைபெற்ற ஏலத்தில் முதல் முறையாக தேங்காய் பருப்பு கிலோ ரூ.100-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டது . 

இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். 

இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் ஸ்ரீ ரங்கன் தெரிவித்து உள்ளார். 
Tags:    

Similar News