செய்திகள்
கைது

தொண்டி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2021-11-30 08:40 GMT   |   Update On 2021-11-30 08:40 GMT
தொண்டி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டி:

தொண்டி பஸ் நிலையம் அருகே அரசால் தடை செய்யப் பட்ட லாட்டரி சீட்டுகளை செல்போன் மூலம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் தொண்டி பஸ் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த சி.கே. மங்கலம் சக்திவேல் (வயது29), பிரவீன் (20) உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 2 செல்போன், மொபைல் பிரிண்டர், ரூ. 240 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News