செய்திகள்
தற்கொலை

வேலூரில் கோட்டை அகழியில் குதித்து ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை

Published On 2021-09-27 10:36 GMT   |   Update On 2021-09-27 10:36 GMT
வேலூரில் கோட்டையில் இன்று காலை இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்:

வேலூர் மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கபூர். இவருடைய மகள் சந்தியா (வயது 24). சி.எம்.சி ஆஸ்பத்திரியில் உள்ள கேண்டீனில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

இன்று காலை வேலூர் கோட்டை நுழைவுவாயில் அருகே உள்ள மதில் சுவரில் சந்தியா ஏறினார். அங்கிருந்து அகழி தண்ணீரில் குதித்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அலறி கூச்சலிட்டனர்.

மேலும் இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் தண்ணீரில் மூழ்கிய சந்தியா பரிதாபமாக இறந்தார். தீயணைப்பு படையினர் அவரது உடலை மீட்டனர்.

வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தியா எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.

அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டையில் இன்று காலை இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News