செய்திகள்
கரும்பு வரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி
கரூர் மாவட்டத்தில் கரும்பு வரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நொய்யல்:
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளனர். பின்னர் அவற்றை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது கரும்பு வரத்து அதிகரித்துள்ளதால் வெல்லம் விலை குறைந்துள்ளது. இதனால் நேற்று உருண்டை வெல்லம் 30 கிலோ கொண்ட ஒரு சிற்பம் ரூ.1,180, அச்சுவெல்லம் 30 கிலோ கொண்ட ஒரு சிற்பம் ரூ.1,230 வரை விற்பனையானது. இதனால் கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.