உள்ளூர் செய்திகள்
பலி

திருச்சி அருகே சிறுமி குட்டையில் மூழ்கி பலி

Published On 2021-12-05 09:43 GMT   |   Update On 2021-12-05 09:43 GMT
திருச்சி அருகே சிறுமி குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக ஜம்புநாதபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஜம்புநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரமேஷ் மனைவி 3-வதாக குழந்தை பெற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து மூத்த மகள் ஜெயஸ்ரீ (3) தன்னுடைய வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அவரது தாய் வீட்டிற்குள் வேலையாக இருந்தார். இதனால் அவர் மகளை கவனிக்கவில்லை.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ரமேஷ் வீட்டின் அருகே மழை நீர் தேங்கி குட்டை போல் காட்சியளித்தது. இந்த குட்டையின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜெயஸ்ரீ எதிர்பாராதவிதமாக தேங்கியிருந்த தண்ணீருக்குள் தவறி விழுந்தார்.

நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய ஜெயஸ்ரீயை யாரும் கவனிக்கவில்லை. இறுதியில் மூச்சுத்திணறி குழந்தை பரிதாபாக இறந்தது.

ஆனால் இதை அறியாத அவரது பெற்றோர் குழந்தையை காணாமல் தேடியுள்ளனர். பின்னர் குழந்தை வைத்து விளையாடிய பொருட்கள் தண்ணீர் நிரம்பிய குட்டையின் அருகே கிடந்ததால் பதட்டம் அடைந்த ரமேஷ் குட்டையில் இறங்கி தேடியுள்ளார்.

அப்போது ஜெயஸ்ரீ பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அவரின் பெற்றோர் கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News