செய்திகள்
மரணம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அடையாளம் தெரியாத முதியவர் பலி

Published On 2021-01-12 09:50 GMT   |   Update On 2021-01-12 09:50 GMT
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

அவர் யார் எந்த ஊர் என்று தெரியவில்லை. இது குறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News