செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னை குடிசைவாசிகளுக்கு நாளை முதல் சுடச்சுட இலவச உணவு- மாநகராட்சி திட்டம்

Published On 2020-12-05 11:03 GMT   |   Update On 2020-12-05 11:03 GMT
சென்னையில் குடிசை வாழ் பகுதி மக்களுக்கு நாளை முதல் டிச 13ந்தேதி வரை உணவு வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அறிவுறுத்தல்படி குடிசை வாழ் பகுதி மக்களுக்கு இலவச உணவு வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நாளை தொடங்கி 13ந்தேதி இரவு வரை குடிசைப் பகுதி மக்களுக்கு சுடச்சுட உணவு வழங்கப்படும். 

சென்னை குடிசைப் பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பம் உள்ள நிலையில், 23 லட்சம் பேர் வசிக்கின்றனர். சென்னை மாநகராட்சி மூலமாக மிகப் பெரிய சேவையாக ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தை தொடங்க முடிவு செய்ப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News