செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 6,112 பேருக்கு கொரோனா தொற்று: 44 பேர் பலி

Published On 2021-02-19 15:05 GMT   |   Update On 2021-02-19 15:05 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து வந்தது. இதனால் பெரும்பாலான தடைகள் நீக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை எளிமைப்படுத்தி வருகிறது.

தற்போது இந்தியாவில் தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலத்தில் மட்டும் 70 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது.

இன்று கேரளாவில் புதிதாக 4,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்ராவில் 6,112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை அம்மாநிலத்தில் 20,87,632 ஆக அதிகரித்துள்ளது. 2159 பேர் டிஸ்சார்ஜ் ஆக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,89,963 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் உயிரிழக்க, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 51,713 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை அம்மாநிலத்தில் 44,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News