செய்திகள்
கைது

வேப்பந்தட்டை அருகே சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது

Published On 2021-06-08 11:41 GMT   |   Update On 2021-06-08 11:41 GMT
வேப்பந்தட்டை அருகே சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார், பில்லங்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை மறித்து சோதனையிட்டபோது சாக்குப்பையில் சுமார் 25 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெத்தசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை(வயது 39), கார்த்திக் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தை கைப்பற்றிய போலீசார், 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News