செய்திகள்
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழப்பு
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சங்குநகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 65). இவர் குமலன்குட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் ஷோரூமில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை பெருந்துறை ரோடு குமலன்குட்டை பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது ஈரோடு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள், பழனியம்மாள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் இறந்த பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு சங்குநகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 65). இவர் குமலன்குட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் ஷோரூமில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை பெருந்துறை ரோடு குமலன்குட்டை பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது ஈரோடு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள், பழனியம்மாள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் இறந்த பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.