உள்ளூர் செய்திகள்
விபத்தில் பலியான செங்கல் சூளை அதிபர்.

செங்கல் சூளை அதிபர் விபத்தில் பலி

Published On 2022-01-27 10:52 GMT   |   Update On 2022-01-27 10:52 GMT
திருப்பத்தூர் அருகே செங்கல் சூளை அதிபர் விபத்தில் பலியானார்.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுத்தெருவை சேர்ந்தவர் சையதுஅலி (வயது46). இவர் கே.வைரவன்பட்டியில் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். 

சையதுஅலி வழக்கம்போல காலையில் செங்கல் சூளைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். 

அப்போது காரையூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகன் ராஜா (30) என்பவர் திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில்  சையதுஅலி தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். 

ராஜாவும் தலையில்  காயத்துடன் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

விபத்து தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News