உள்ளூர் செய்திகள்
ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கதண்டு கடித்து உயிரிழந்தார்.
ஒரத்தநாடு:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள
தொண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 65).
கடந்த 9-ம் தேதி வளையகாடு பகுதி சாலையில் வந்தபோது
ஒரு மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு வண்டுகள் அவரை
கடித்ததில் சம்பவ இடத்திலையே மயங்கி விழுந்துள்ளார்.
பக்கிரிசாமியை மீட்டு தொண்டராம்பட்டு ஆரம்ப
சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பின் மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து
பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.