செய்திகள்
கொரோனா விழிப்புணர்வு பேரணி

எடையூர் கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

Published On 2021-07-23 15:48 GMT   |   Update On 2021-07-23 15:48 GMT
திருக்கோவிலூர் அருகே உள்ள எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கொரோனா நோய் தொற்றை தடுப்பது குறித்தும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படு்த்தினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருக்கோவிலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் கொடுத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீ்ண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News