செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பு முகாமில் 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்- கலெக்டர் தகவல்

Published On 2021-09-10 08:58 GMT   |   Update On 2021-09-10 09:04 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ந்தேதி 760 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ந்தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசுகையில், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ந்தேதி 760 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. ஒரே நாளில் 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக நினைவூட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார். கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News