தொழில்நுட்பம்
இந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் தனது மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை மீண்டும் மாற்றி இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு மூன்று ஸ்மார்ட்போன்களின் விலையை இந்தியாவில் மீண்டும் மாற்றியிருக்கிறது. முன்னதாக ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. இவற்றில் சியோமியின் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன்களின் விலையும் உயர்த்தப்பட்டன.
அந்த வகையில் ரெட்மி நோட் 8, ரெட்மி 8ஏ டுயல் மற்றும் ரெட்மி 8 ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 8 4ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 11,499 இல் இருந்து ரூ. 11,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரெட்மி 8 4ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9299 இல் இருந்து தற்சமயம் ரூ. 9499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரெட்மி 8ஏ டூயல் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7299 இல் இருந்து தற்சமயம் ரூ. 7499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரெட்மி ஸ்மார்ட்போன்களின் மாற்றப்பட்ட புதிய விலை சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டது. விரைவில் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் இவை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.