செய்திகள்
கன்னிவாடி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கன்னிவாடி அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னிவாடி:
கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணாமலை மகள் திவ்யா (வயது 26). இவருக்கும், புதுப்பட்டி சண்முகம் மகன் ராஜ்குமாருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் திவ்யாவின் மாமனார் சண்முகம், மாமியார் மாரியம்மாள், மைத்துனர் ராஜசேகர், கணவர் ராஜ்குமார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கன்னிவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திண்டுக்கல் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.