செய்திகள்
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கொலை மிரட்டல்
தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். இவர் பா.ஜனதா கட்சியில் இணைந்து தற்போது மக்களவை எம்.பி.யாக உள்ளார்.
கம்பீர் இன்று டெல்லி போலீசாரிடம், தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக புகார் அளித்துள்ளார். அந்த அமைப்பு இ-மெயில் மூலம் மிரட்டல் அனுப்பியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதனால் கவுதம் கம்பீர் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.