செய்திகள்
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் கனமழை- ரங்கசாமியுடன் தொலைபேசியில் தமிழிசை ஆலோசனை

Published On 2021-11-09 08:03 GMT   |   Update On 2021-11-09 08:03 GMT
புதுச்சேரியில் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கவர்னர் கேட்டறிந்தார்.
புதுச்சேரி:

தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை குறித்து ஆலோசனை நடத்தினார்.

மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News