ஆன்மிகம்
சித்தூர் விநாயகர் கோவிலில் காயத்ரிதேவி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்
சித்தூர் கிரீம்ஸ்பேட்டை விநாயகர் கோவிலில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தும், முகக் கவசம் அணிந்தும் அம்மனை தரிசனம் செய்தனர்.
சித்தூர் கிரீம்ஸ்பேட்டை துர்காநகர் காலனியில் உள்ள சித்தி விநாயகர் கோவில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று சித்தி புத்தியம்மன் காயத்ரிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தும், முகக் கவசம் அணிந்தும் அம்மனை தரிசனம் செய்தனர். முகக் கவசம் அணியாமல் வந்த பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
கோவில் தர்மகர்த்தா வெங்கட்ரமணா கூறுகையில், கோவிலில் 17 வருடங்களாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது, என்றார். விழாவில் கோவில் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ருத்ரன், வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவில் தர்மகர்த்தா வெங்கட்ரமணா கூறுகையில், கோவிலில் 17 வருடங்களாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது, என்றார். விழாவில் கோவில் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ருத்ரன், வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.