செய்திகள்
கைது

நாகையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது

Published On 2021-11-23 10:14 GMT   |   Update On 2021-11-23 10:14 GMT
நாகையில் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? என போலீசாரும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை நகர் பகுதியில் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரிய கடைத்தெரு பகுதியில் சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் அந்தணப்பேட்டையை சேர்ந்த முகமது பயாஸ் (வயது 26) என்பதும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு வினியோகம்செய்ய மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பயாசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 10 கிலோ புகையிலை பொருட்களையும் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News