செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா

Published On 2021-09-11 09:59 GMT   |   Update On 2021-09-11 09:59 GMT
நாமக்கல் மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,467 ஆக உயர்ந்தது. நேற்று 46 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 48,379 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதுவரை 477 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். 611 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News