வழிபாடு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 8-ந்தேதி திருவிளக்கு பூஜை

Published On 2022-04-06 08:15 GMT   |   Update On 2022-04-06 08:15 GMT
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திருவிளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்கள் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்கள் மீண்டு நிம்மதியுடன் வாழவும், உலக மக்கள் நலமோடு வாழவும் வேண்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பும் பெண்கள் ஆஞ்சநேயர் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்க வரும்போது, குத்துவிளக்கு, மணி, கற்பூரத் தட்டு கொண்டுவர வேண்டும்.

பூஜைக்குத் தேவையான பொருள்கள் மற்றும் 36 பக்க திருவிளக்கு பூஜைப் புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என்று ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News