ஆன்மிகம்
செண்பகராம நல்லூர் வண்டிமலைச்சி அம்மன் கோவில் கொடை விழா
2-ம் நாள் விநாயகர் கோவிலில் இருந்து பால் குடம் எடுத்து வருதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், அம்மன் கும்பம் எடுத்து வீதி உலா வருதல், அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாங்குநேரி தாலுகா செண்பகராமநல்லூர் வண்டிமலையான் வண்டிமலைச்சி அம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் கன்னியாகுமரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கும்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2-ம் நாள் விநாயகர் கோவிலில் இருந்து பால் குடம் எடுத்து வருதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், அம்மன் கும்பம் எடுத்து வீதி உலா வருதல், அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவில் அலங்கார பூஜை, சாம கொடை நடந்தது.
விழாவில் நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அக்தார் என்.பெருமாள், பரப்பாடி அ.தி.மு.க. கிளை செயலாளரும், பரப்பாடி அபி ஸ்வீட்ஸ்-பேக்கரி உரிமையாளருமான ஏ.வேல்துரை ஆகியோர் செய்திருந்தனர்.
2-ம் நாள் விநாயகர் கோவிலில் இருந்து பால் குடம் எடுத்து வருதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், அம்மன் கும்பம் எடுத்து வீதி உலா வருதல், அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவில் அலங்கார பூஜை, சாம கொடை நடந்தது.
விழாவில் நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அக்தார் என்.பெருமாள், பரப்பாடி அ.தி.மு.க. கிளை செயலாளரும், பரப்பாடி அபி ஸ்வீட்ஸ்-பேக்கரி உரிமையாளருமான ஏ.வேல்துரை ஆகியோர் செய்திருந்தனர்.