ஆன்மிகம்
முருகன்

கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 28-ந்தேதி நடக்கிறது.

Published On 2021-01-23 06:48 GMT   |   Update On 2021-01-23 06:48 GMT
கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 19-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது.

கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

விழாவின் முதல்நாள் அதிகாலை 5.30 மணிக்கு நிர்மால்ய தரிசனம், காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு யாகசாலை பூஜை, 9 மணிக்கு ராஜமேளம், 10.30 மணிக்கு கொடி ஏற்றம் நடந்தது. பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பஜனை, 8 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமியுடன் அம்பாள் கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

10-ம் நாள் திருவிழாவான 28-ந்தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி கிரிவலம் வருதல், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை குளத்தில் சாமிக்கு தீர்த்தவாரி ஆராட்டு ஆகியவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் நற்பணி மன்றத்தினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News