செய்திகள்
கருணரத்னே இரட்டை சதம், தனஞ்செய டி சில்வா சதம் - 4ம்நாள் முடிவில் இலங்கை 512/3
கேப்டன் கருணரத்னே இரட்டை சதமடிக்க, தனஞ்செய டி சில்வா சதமடித்து அசத்த இலங்கை அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக்கு 512 ரன்கள் குவித்துள்ளது.
பல்லேகெலே:
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 541 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 163 ரன்னிலும், மொமினுல் ஹக் 127 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹூசைன்-மொமினுல் ஹக் ஜோடி 242 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டியில் மொமினுல் ஹக் டித்த 11-வது சதம் இதுவாகும். வெளிநாட்டு மண்ணில் அவரது முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிம் இக்பால் 90 ரன்னில் வெளியேறினார். லிட்டன் தாஸ் அரை சதமடித்து அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் அரை சதமடித்து 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக திமுத் கருணரத்னே, லஹிரு திரிமானே களமிறங்கினர்.
இருவரும் நிதானமாக ஆடி அரை சதமடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தது. அரை சதமடித்த திரிமானே அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒஷடா பெர்னாண்டோ 20 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 25 ரன்னிலும் வெளியேறினர். 3ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 85 ரன்னுடனும், தனஞ்செய டி சில்வா 26 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. கருணரத்னேவும், தனஞ்செய டி சில்வாவும் பொறுப்புடன் ஆடினர்.
இருவரும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் வங்காளதேச பந்து வீச்சு பயனளிக்கவில்லை.
கருணரத்னே இரட்டை சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைத்த தனஞ்செய டி சில்வா சதமடித்தார்.
நான்காம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 512 ரன்கள் குவித்துள்ளது. கருணரத்னே 234 ரன்களுடனும், தனஞ்செய டி சில்வா 154 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் வங்காளதேசத்தை விட இன்னும் 29 ரன்கள் பின்தங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வராத நிலையில், இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமிருப்பதால் முதல் டெஸ்ட் டிராவில் முடியவே வாய்ப்புள்ளது.
இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 541 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 163 ரன்னிலும், மொமினுல் ஹக் 127 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹூசைன்-மொமினுல் ஹக் ஜோடி 242 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டியில் மொமினுல் ஹக் டித்த 11-வது சதம் இதுவாகும். வெளிநாட்டு மண்ணில் அவரது முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிம் இக்பால் 90 ரன்னில் வெளியேறினார். லிட்டன் தாஸ் அரை சதமடித்து அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் அரை சதமடித்து 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக திமுத் கருணரத்னே, லஹிரு திரிமானே களமிறங்கினர்.
இருவரும் நிதானமாக ஆடி அரை சதமடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தது. அரை சதமடித்த திரிமானே அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒஷடா பெர்னாண்டோ 20 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 25 ரன்னிலும் வெளியேறினர். 3ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 85 ரன்னுடனும், தனஞ்செய டி சில்வா 26 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இருவரும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் வங்காளதேச பந்து வீச்சு பயனளிக்கவில்லை.
கருணரத்னே இரட்டை சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைத்த தனஞ்செய டி சில்வா சதமடித்தார்.
நான்காம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 512 ரன்கள் குவித்துள்ளது. கருணரத்னே 234 ரன்களுடனும், தனஞ்செய டி சில்வா 154 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் வங்காளதேசத்தை விட இன்னும் 29 ரன்கள் பின்தங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வராத நிலையில், இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமிருப்பதால் முதல் டெஸ்ட் டிராவில் முடியவே வாய்ப்புள்ளது.