ஆன்மிகம்
பிரம்மோற்சவ விழா 8-வதுநாள்: காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் தேர்த்திருவிழா
சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளில் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம், ஆராதனை நடந்தது.
சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் உள்ளேயே உற்சவர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு தேர்த்திருவிழா நடந்தது. கோவில் உள்ளேயே தேரில் உற்சவர் விநாயகர் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்று முகக் கவசம் அணிந்தும், கிருமி நாசினியை பயன்படுத்தியும், சமூக விலகலை கடைப்பிடித்தும் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவின் 9-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை பிச்சாடனார் அலங்காரத்தில் வாகன உலா, மதியம் அபிஷேகம், இரவு திருக்கல்யாண உற்சவம், குதிரை (அஸ்வ) வாகன உலா நடக்கிறது.
அதில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்று முகக் கவசம் அணிந்தும், கிருமி நாசினியை பயன்படுத்தியும், சமூக விலகலை கடைப்பிடித்தும் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவின் 9-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை பிச்சாடனார் அலங்காரத்தில் வாகன உலா, மதியம் அபிஷேகம், இரவு திருக்கல்யாண உற்சவம், குதிரை (அஸ்வ) வாகன உலா நடக்கிறது.