ஆன்மிகம்
உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவில் தேர் திருவிழா நாளை தொடங்குகிறது
உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூலை 1-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூலை 1-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், காலை 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது.
7 மணிக்கு அன்னதர்மமும், 8 மணிக்கு கோலப்போட்டியும், பகல் 12 மணி மற்றும் மாலை 4 மணி பணிவிடையும், உகப்படிப்பும், மாலை 6 மணிக்கு அய்யா தொட்டில் வாகன பவனி ஆகியவை நடக்கிறது. இதே போல் தினமும் காலை, பகல், மாலை நேரங்களில் பணிவிடை, உகப்படிப்பும், அய்யா வாகன பவனியும், இரவு அன்னதர்மமும் நடைபெறுகிறது.
28-ந்தேதி மாலை 5 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 1-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், 10 மணிக்கு அன்னதர்மமும், பகல் 1 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 3 மணிக்கு செம்பவள பஞ்சவர்ண தேரோட்டம் நடைபெறுகிறது.
இரவு 8 மணிக்கு பல்சுவை நிகழ்ச்சி மற்றும் நாட்டுப்புற நடனங்கள், நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், அதைத்தொடர்ந்து அய்யா வாகன பவனியும், கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் பிச்சைப்பழம் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.