செய்திகள்
பொன்.கவுதமசிகாமணி எம்.பி.ஆய்வு செய்த காட்சி

ரூ.381¾ கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் தீவிரம் - பொன்.கவுதமசிகாமணி எம்.பி.ஆய்வு

Published On 2021-02-19 11:30 GMT   |   Update On 2021-02-19 11:30 GMT
கள்ளக்குறிச்சியில் ரூ.381¾ கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் ரூ.381 கோடியே 76 லட்சத்தில் அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 4-வது மாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதம சிகாமணி நேரில் ஆய்வு செய்தார். 

அப்போது கட்டிடம் தரமாக கட்டப்பட்டு வருகிறதா?, மண் பரிசோதனை சான்று முறையாகப் பெறப்பட்டுள்ளதா? எனவும், கட்டிட வரைபடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் சுப்பையா, உதவி பொறியாளர்கள் வெங்கடேசபெருமாள், கார்த்தி கேயன், இளநிலை பொறியாளர் ராஜேஷ், தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் பி.கே.முரளி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், கென்னடி, பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு, கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அரவிந்தன் மற்றும் மாயவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News