செய்திகள்
காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பிரியங்கா காந்தி கைது: சென்னையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-04 09:42 GMT   |   Update On 2021-10-04 09:42 GMT
பிரியங்கா காந்தி கைதை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராகவும் உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராகவும் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராயபுரம்:

உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்றபோது பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் எம். எஸ்.திரவியம் தலைமையில் வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்டத்தலைவர் துரைராஜ், மாவட்ட துணை தலைவர் இளஞ்செழியன், ஆர்.கே.நகர் பகுதி தலைவர் சையத் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராகவும் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

Similar News