செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வுடன் ரூ.4.35-ஆக நிர்ணயிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில், முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. ‘ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்கள், புரட்டாசி மாதம் நிறைவு போன்றவற்றால் வருகின்ற நாட்களில் முட்டை விற்பனை அதிகரிக்கக் கூடும் என்பதால் மற்ற மண்டலங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும்’ என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வுடன் ரூ.4.35-ஆக நிர்ணயிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில், முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. ‘ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்கள், புரட்டாசி மாதம் நிறைவு போன்றவற்றால் வருகின்ற நாட்களில் முட்டை விற்பனை அதிகரிக்கக் கூடும் என்பதால் மற்ற மண்டலங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும்’ என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வுடன் ரூ.4.35-ஆக நிர்ணயிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.