செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 608 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-06-07 13:57 GMT   |   Update On 2021-06-07 13:57 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 36,831 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,223 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 608 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,831 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 858 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 29 ஆயிரத்து 442 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 309 பேர் இறந்து விட்ட நிலையில், 7,080 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் முழு ஊரடங்கு மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News