உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தில் பேராசிரியர் பலியானார்.
திருச்சி:
துறையூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் நாமக்கல்லில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மகன் சங்கமேஷ் (9). இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு நாமக்கல்லில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் வந்து காமாட்சிபுரம் பஸ் நிலையத்தில் இறங்கி தனது வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று இவர்கள் இருவர் மீதும் பயங்கரமாக மோதியுள்ளது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்துசைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சையில் இருந்த பாலமுருகன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துறையூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் நாமக்கல்லில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மகன் சங்கமேஷ் (9). இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு நாமக்கல்லில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் வந்து காமாட்சிபுரம் பஸ் நிலையத்தில் இறங்கி தனது வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று இவர்கள் இருவர் மீதும் பயங்கரமாக மோதியுள்ளது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்துசைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சையில் இருந்த பாலமுருகன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.