ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 20-ந்தேதி வரலட்சுமி விரத பூஜை

Published On 2021-08-14 08:49 GMT   |   Update On 2021-08-14 08:49 GMT
கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் பங்கேற்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமலை :

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரத பூஜை நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் பங்கேற்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்கள் ரூ.1001ஐ ஆன்லைனில் செலுத்தி, தேவஸ்தான வெப்சைட்டில் சென்று இதற்குண்டான டிக்கெட் பெற்று பங்கேற்கலாம். இந்த டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு தபால் துறையின் சார்பில் மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த வரலட்சுமி விரத டிக்கெட்டுகளை www.Tirupatibalaji.Ap.Gov.In என்ற தேவஸ்தான இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம். வரும் 20-ந்தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை வரலட்சுமி விரத பூஜை நடைபெற உள்ளது.

அர்ச்சகர்கள் பத்மாவதி தாயார் மூலவர் சந்நிதியில் இருந்தபடி வரலட்சுமி விரத பூஜையை மேற்கொள்ள உள்ளனர். பக்தர்கள் தங்கள் வீடுகளில் வேஸ்தான தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி மூலம் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News