செய்திகள்
திருமணம்

சிறுமிக்கு ரகசிய திருமணம் செய்த 5 பேர் மீது வழக்கு

Published On 2019-10-03 10:24 GMT   |   Update On 2019-10-03 10:24 GMT
திண்டுக்கல்லில் சிறுமிக்கு ரகசிய திருமணம் செய்து வைத்த 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல்லில் ஒரு குழந்தைகள் இல்லத்தில் தங்கிய 17 வயது சிறுமியை நிலக்கோட்டை அருகே உள்ள அவையம்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் உமேஷ் பாண்டி என்பவருக்கு சிலர் ரகசியமாக திருமணம் செய்து வைத்தனர்.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி உமேஷ் பாண்டி ,கருப்பசாமி, ராசாத்தி , கண்ணன், சந்திரா 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். இதுபற்றி மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News