உள்ளூர் செய்திகள்
பறக்கையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
பறக்கையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டர்.
கன்னியாகுமரி:
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் மற்றும் போலீசார் பறக்கை சந்திப்பு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் பறக்கை அருகே உள்ள கக்கன்புதூர் நடுதெருவை சேர்ந்த சபின் (வயது 19) என்பது தெரிய வந்தது.
அவரை சோதனை செய்ததில் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.