ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

பெரும்பாறை அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2020-11-05 04:21 GMT   |   Update On 2020-11-05 04:21 GMT
பெரும்பாறை அருகே புதூர் கிராமத்தில் காளியம்மன், கன்னிமூலை விநாயகர், கருப்பணசாமி, பாண்டீஸ்வரர் ஆகிய கோவில்களின் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பெரும்பாறை அருகே புதூர் கிராமத்தில் காளியம்மன், கன்னிமூலை விநாயகர், கருப்பணசாமி, பாண்டீஸ்வரர் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலத்துடன் புனித நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கோவில்களின் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமன், திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், மணலூர் ஊராட்சி தலைவர் லதா செல்வகுமார், துணைத்தலைவர் சுருளிராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் மலைக்கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News