செய்திகள்
ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் பரிசு: கமல் டுவீட்
ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது என கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது. நாளை நமதே!’’ எனத் தெரிவித்துள்ளார்.