உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

அம்பத்தூரில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய விமானி மீது வழக்கு பதிவு

Published On 2022-01-12 11:28 GMT   |   Update On 2022-01-12 11:28 GMT
அம்பத்தூரில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய விமானி மீது போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:

அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனி முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நிவேதா (29). இவர் மத்திய அரசின் அல்லையன்ஸ் ஏர் என்ற நிறுவனத்தில்  உதவி பைலட்டாக பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த ராகுல் ஆனந்த் (31). இவர்கள் இருவரும் கடந்த 2011ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் விமான ஓட்டுனர் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்த  இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவரம் இரு வீட்டிற்கும் தெரிய வர கடந்த ஆண்டு சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் ராகுல் ஆனந்த் அப்பா திருநாவுக்கரசு நிவேதாவிடம் இனி எனது மகனிடம் எதுவும் பேசக்கூடாது செல்போனில் தொடர்பு கொள்ளக்கூடாது என்று மிரட்டியதாகவும் நேரில் தொடர்பு கொண்டால் நீங்கள் இருவரும் காதலிக்கும் போது எடுத்த படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டினார்.

இது சம்பந்தமாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் நிவேதா புகார் அளித்தார் போலீசார் விசாரணை செய்ததில் இன்னும் இரண்டு மாதத்தில் நிவேதாவை திருமணம் செய்வதாக உறுதி அளித்தார் ராகுல். ஆனால் தற்சமயம் வரை செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாக இன்று காலை மீண்டும் நிவேதா அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராகுல் ஆனந்த் மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News