தொழில்நுட்பச் செய்திகள்
யூ.பி.ஐ சேவை

புதிய சேவையை வழங்கப்போகும் டாடா... இனி பணம் அனுப்புவது ஈசி!

Published On 2022-03-17 10:45 GMT   |   Update On 2022-03-17 10:45 GMT
இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்படவுள்ளது.
இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த துறையில் பேடிஎம்,போன்பே, கூகுள் பே, அமேசான் பே என பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது டாடா குழுமமும் இந்த துறையில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது. டாடா குழுமத்தின் யூ.பி.ஐ செயலிக்கு ‘டாடா நியு’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்படவுள்ளது. டாடாவின் இந்த நியு சேவை, பிற யூபிஐ செயலிகளை விட அதிவேகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த டாடா நியு யூபிஐ செயலி அடுத்த மாதம் ஐபிஎல் தொடரின் போது அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு யூபிஐ செயலிகளும் கேஷ்பேக், கூப்பன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றன. இதே வகையில் டாடா நியு செயலியிலும் பல வகையான சலுகைகள், கேஷ்பேக்குகள் வழங்கப்படவுள்ளன.

இதைத்தவிர டாடா டிஜிட்டலின் பிற செயலிகளான பிக்பாஸ்கெட், 1 எம்.ஜி, குரோமா, டாடா கிளிக், ஃபிளைட் புக்கிங் சேவை ஆகியவற்றையும் இந்த நியு செயலியிலேயே பயன்படுத்த முடியும்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News