வழிபாடு
சுவாமிநாதசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சுவாமிநாதசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published On 2022-04-12 03:08 GMT   |   Update On 2022-04-12 03:40 GMT
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 18-ம் தேதி 9-ம் நாள் திருவிழா அன்று சித்திரை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. ஆண்டுதோறும் இக்கோவிலில் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த

ஆண்டுக்கான விழா கடந்த 9ம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி விழா கொடியேற்றம் நடந்தது. விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி,

சண்டிகேஸ்வரர் உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு படி சட்டத்தில் சுவாமி வீதியுலா காட்சியும் நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 2ம் நாள் பல்லக்கில் சுவாமி வீதிஉலா மற்றும் இடும்பன் வாக-னத்தில் சுவாமி வீதிஉலாவும், தொடர்ந்து பூத, ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி மயில், ஏனைய பரிவார வாகனத்தில் சப்பரத்தில் பஞ்சமூர்த்தி வீதியுலா, தொடர்ந்து யானை வாகனம், காமதேனு வாக-னத்தில் சுவாமி வீதி உலா, வெண்ணைத்தாழி பல்லக்கில் சுவாமி வீதிஉலா மற்றும் வெள்ளிகுதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வாக வருகிற 18-ம் தேதி 9-ம் நாள் திருவிழா அன்று சித்திரை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மறுநாள் மதியம் தீர்த்தவாரியும் இரவு அவரோகணம் திக்விதர்சனம்

நிகழ்ச்சியின் நிறைவாக வருகிற 20-ம் தேதி சித்திரை திருவிழா முடிந்து சுவாமி யதாஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் ஜீவானந்தம், சுவாமிமலை சாலியர் பொது மேனேஜிங் டிரஸ்டி செந்தில்வேலன் மற்றும் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News