செய்திகள்
கோப்புப் படம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

Published On 2020-09-09 12:55 GMT   |   Update On 2020-09-09 12:55 GMT
சத்தீஸ்கரில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் உள்ளது கலஹண்டி பகுதி. இந்த கிராமத்தின் காட்டு பகுதிகளில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதிரடிப் படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடந்த சண்டையில் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
Tags:    

Similar News