செய்திகள்
கைது

கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது

Published On 2020-11-25 03:08 GMT   |   Update On 2020-11-25 03:08 GMT
கோவை அடுத்த வெள்ளலூரில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோவை:

கோவையை அடுத்த வெள்ளலூர் கஞ்சிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 57). இவர் கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அந்த குடியிருப்பில் வசிக்கும் 4 வயது சிறுமி அங்குள்ள கார் பார்க்கிங் பகுதியில் விளையாடி கொண்டிருந்தாள்.

இதை பார்த்த ரவிச்சந்திரன் அங்கு சென்று அந்த சிறுமியிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு யாரும் இல்லாததை அறிந்த ரவிச்சந்திரன், அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த சிறுமி அழுதுகொண்டே தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் பெற்றோர், சிறுமியிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டபோது, தனக்கு நடந்ததை அழுதபடி சொன்னார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றார் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, ரவிச்சந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Tags:    

Similar News