செய்திகள்
சூடான பால்

நிலக்கோட்டையில் டீ மாஸ்டர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய வாலிபர்

Published On 2019-09-11 10:16 GMT   |   Update On 2019-09-11 10:16 GMT
நிலக்கோட்டையில் டீ மாஸ்டர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே தோப்புபட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் அருண்குமார். இவர் நிலக்கோட்டை பெரியகாளியம்மன் கோவில் தெருவில் தனியார் பள்ளி அருகே உள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த கடைக்கு கொங்கர்குளத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் வந்துள்ளார். இவர் கடையில் பலகாரத்தை சாப்பிட்டுள்ளார். பின்னர் எச்சில் கையுடன் மீண்டும் பலகாரத்தை தொட்டதால் அருண்குமார் அவரிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மலைச்சாமி கடையில் கொதித்துக் கொண்டு இருந்த சுடுபாலை எடுத்து அருண்குமார் மீது ஊற்றினார்.

இதனால் அருண்குமார் எரிச்சல் தாங்க முடியாமல் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடியதால் மலைச்சாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்துமலைச்சாமியை தேடி வருகிறார்.

Tags:    

Similar News