செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

Published On 2021-10-27 07:04 GMT   |   Update On 2021-10-27 07:04 GMT
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கட்டுப்பாட்டு அறைக்கும், அங்கிருந்த ரத்தினகுமார் மத்திய போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட போலீஸ்  நிலையங்களில் பணியாற்றி வந்த 5 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார்.

அதில் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் பதுருன்னிசாபேகம், சைபர் கிரைமுக்கும், வீரபாண்டி இன்ஸ்பெக்டர் கீதா சிறப்பு புலனாய்வு பிரிவுக்கும், வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த் வீரபாண்டிக்கும், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கட்டுப்பாட்டு அறைக்கும், அங்கிருந்த ரத்தினகுமார் மத்திய போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 
Tags:    

Similar News