செய்திகள்
உத்தரகாண்ட் சட்டசபை இடைத்தேர்தல் - பிதோராகர் தொகுதியை மீண்டும் கைப்பற்றியது பாஜக
உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற பிதோராகர் சட்டசபை தொகுதியை பாஜக மீண்டும் கைப்பற்றியது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோராகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் பந்த் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் சந்திரகாந்த் பந்த், காங்கிரஸ் சார்பில் அஞ்சு லந்தி ஆகியோரும் போட்டியிட்டனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளரை விட பாஜக வேட்பாளர் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பிதோராகர் சட்டசபை தொகுதியை பாஜக மீண்டும் கைப்பற்றியுள்ளது.