செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

நீடாமங்கலம் வட்டாரத்தில் 69 பேருக்கு கொரோனா

Published On 2021-06-08 11:24 GMT   |   Update On 2021-06-08 11:24 GMT
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சிஅமைப்பினர் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டாரத்தில் நேற்று பெண்கள் உள்பட 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தகவலறிந்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரசெவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மன்னார்குடி, வலங்கைமான் அரசுமருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதனை தொடர்ந்து தொற்று ஏற்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சிஅமைப்பினர் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News