செய்திகள்
தற்கொலை

பழனியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

Published On 2020-11-21 07:50 GMT   |   Update On 2020-11-21 07:50 GMT
பழனியில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). வாடகை கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் வேலை தொடர்பாக பழனிக்கு வாடகை காரில் வந்தார். அப்போது அவர் பழனி பயணியர் விடுதியில் தங்கினார். 

இந்தநிலையில் நேற்று காலை மணிகண்டன் தங்கியிருந்த அறை வெகுநேரமாக திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், பழனி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து, மணிகண்டன் தங்கியிருந்த அறையின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது, அங்குள்ள குளியல் அறையில் அவர் தூக்கில் பிணமாக தொங்கியபடி இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதையடுத்து மணிகண்டனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News