செய்திகள்
பெரிசனம்பட்டி சாலை

விரிவாக்கம் செய்யப்படும் பெரிசனம்பட்டி சாலை

Published On 2021-06-09 09:19 GMT   |   Update On 2021-06-09 12:35 GMT
எலையமுத்தூர், கொமரலிங்கம், கல்லாபுரம், பெரிசனம்பட்டி வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் விளைபொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் சிரமப்பட்டு வருகின்றன.
உடுமலை:

உடுமலை குறிச்சிக்கோட்டையில் இருந்து பெரிசனம்பட்டி வழியாக எலையமுத்தூர் செல்லும் சாலை நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்த சாலையின் பல இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் விலகிசெல்ல முடியாத அளவுக்கு குறுகலாக இருந்தது. இதனால் எலையமுத்தூர், கொமரலிங்கம், கல்லாபுரம், பெரிசனம்பட்டி வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் விளைபொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களும் சிரமப்பட்டு வந்தன.எனவே சாலையை எலையமுத்தூர் வரை முழுமையாக விரிவுபடுத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு  நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டம் சார்பில் பெரிசனம்பட்டி பகுதியில் சாலை விரிவாக்கப்படுகிறது. தற்போது இடைவழித்தடமாக உள்ள சாலை விரிவாக்கப்படுவதால் நெரிசல் குறைந்து விபத்துகள் தவிர்க்கப்படும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
Tags:    

Similar News